Sanwardhana Abhiman-2022
சங்கவர்தன அபிமானி திட்டம் ஆரம்பம்
'சங்கவர்தன அபிமானி' என்ற வேலைத்திட்டமொன்று பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்த்து வைப்பதற்கும் அவர்களின் தேவைகள் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கும் நோக்கிலும் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் மூலம் மாவட்ட மட்டத்தில் இத் திட்டத்தை முன் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட வேலைத் திட்டம் இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரனசிங்க, டி.பி.சானக, சிரிபால கம்லத் ஆகியோர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் விற்பனையாளர்களின் பிரச்சினைகள், தேவைகள் பலவற்றிற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்