New appointments for public service companies in Mullaitivu district New appointments for public service companies in Mullaitivu district - examsguide.lk

 New appointments for public service companies in Mullaitivu district-2022

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச சேவை நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினால் பல்வேறு அரச சேவை நிறுவனங்களில் வெற்றிடமாக உள்ள ஆரம்ப தரத்தின் பதவிகளுக்கு பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பயிற்சியினை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கப்டன் ஐ.சசிக்குமார் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(07) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் பிரதம அதிதியாக கலந்கொண்டு குறித்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.
தேசிய தொழிற்தகமை மூன்றவது மட்டத்தினை (NVQ 3) பயிற்சிக்காலத்தில் பூர்த்தி செய்துள்ள இவர்கள் நிரந்தரமான வெற்றிடமாக உள்ள இடங்களிற்கே இவ்வாறு பயிற்சிக்கால கொடுப்பனவுகளுடன் நிரந்தர நியமனம் பெறும்வரை பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னரும் குறித்த அலுவலகங்களில் நிரந்தர உத்தியோகத்தர்களாக கடமையாற்றுவர். இதன்போது கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 09 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 06 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 18 பேருமாக 51 பேர் பல்வேறு அரச திணைக்கள வெற்றிடங்களுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post