Nepal Prime Ministers' first foreign visit to India
நேபாள பிரதமர் டியுபா வாரணாசி நகர் வருகை
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நேபாள
பிரதமர் ஷெர் பஹதுர் டியுபா மற்றும் அவரது மனைவி ஆர்சு ரானா டியுபா ஆகியோர்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் உடன் வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில்
பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மூன்று நாள் விஜயமாக கடந்த
வெள்ளிக்கிழமை டியுபா இந்தியா வந்தார். 2021 ஜூலை மாதம் பதவி ஏற்ற அவரின் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது
இருந்தது. இந்த விஜயத்தின் கடைசி நாளில் அவர் வாரணாசி வருகை தந்தார். அங்கு
அவருக்கு பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இந்திய
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த டியுபா இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது பற்றி
கலந்தாலோசித்தார். இதன்போது பீகாரின் ஜயங்கரில் இருந்து நேபாளத்தின் குர்தா வரையான
35
கிலோமீற்றர் ரயில் இணைப்பை இரு
பிரதமர்களும் தொடங்கிவைத்தனர்.
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்